தீவிரவாதிகளின் மையப்புள்ளியாக மாறும் சிரியா Netanyahu: A Criminal at Hom...
தீவிரவாதிகளின் மையப்புள்ளியாக மாறும் சிரியா.
நெதன்யாஹு, உள்நாட்டில் குற்றவாளி. உலகில் பயங்கரவாதி.
இஸ்ரேலுக்கான அரபுநாடுகளின் ஏற்றுமதி பெருமளவு அதிகரிப்பு.
காசா படுகொலைகள் - யுனிசெஃப் கடும் கண்டனம்.
அமெரிக்க மிரட்டலுக்கு பயப்படாத ஏமன் மக்கள்.
டெல் அவிவ் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மீதான குற்ற வழக்கு, மிகுந்த எதிர்பார்ப்போட விசாரணைக்கு வருது. செவ்வாய்க் கிழம காலையில ஒன்பது மணிக்கு துவங்குற இந்த விசாரணைல ஆஜராக..நெதன்யாஹூகூட ஒரு கும்பலும், அதாவது நெதன்யாஹுவோட சட்ட விரோத செயலுக்கு முட்டுக் கொடுக்குறவங்களும், நெதன்யாஹுவை தூக்கிப் பிடிக்கிறவங்களும், நெதன்யாஹுவோட ஜால்ராக்களும், எடுபிடிகளும், ஒரு கும்பலா சேர்ந்து, சட்ட அமலாக்கத்துறை எதிர்த்தும், பத்திரிகையாளர்களையும், மீடியாக்களையும் எதிர்த்தும், அட்டர்ணி ஜெனெரல்கள எதிர்த்தும், பெரிய அளவுக்கு பம்பார்ட்மென்ட் பண்ண போறதா இஸ்ரெலோட தேசிய பத்திரிகையான, ஹாரேட்ஜ், தன்னோட எடிட்டோரியில்ல எழுதி இருக்கிறது. இந்த ஹாரட்ஜ் அப்படிங்கற இஸ்ரேலோட தேசிய பத்திரிகை, நெதன்யாவுக்கு எதிரா சில பல உண்மைகளை எழுதறதுனால, அந்த பத்திரிக்கையை க்ளோஸ் பண்றதுக்கு, பத்திரிக்க ஆஃபீஸையே மூடு விழா பண்றதுக்கு, நெதன்யாஹூ எல்லா ஏற்பாடுகளையும் பண்றதா அந்த ஹாரட்ஸ் பத்திரிக்கை வெளிப்படையா எழுதியிருக்கு.
லெபனான்ல ஏற்பட்டிருக்கிற போர் நிறுத்தம், இஸ்ரேல ஆளுகிற கூட்டணிக்கும், அத தலம தாங்குற நபரான நெதன்யாஹுவுக்கும், நிறைய நேரத்த கொடுத்து இருக்குது. அது மட்டும் இல்லாம, அவங்கள எதிர்த்து வாதாடுற அரசாங்க வக்கீல், அட்டர்னி ஜெனரல், அதோட சின்பெட் பாதுகாப்பு சேவையை சேர்ந்தவங்க அப்புறம், இஸ்ரேல் சிவில் defense , பாதுகாப்பு படை, இவங்களுக்கு இடையில இருக்கிற ஒரு நெருக்கத்தை, அதாவது, நெதன்யாவுக்கு எதிராக இருக்கிற, இவங்களுக்கு இடையே இருக்கிற நெருக்கத்தை கொறச்சு, மிக மோசமான சட்ட சிக்கல்கள உருவாக்குறதுக்கு, இந்த ஃப்ரீயா இருக்கற நேரத்த, நெதன்யாஹு கும்பல் நல்லபடியா யூஸ் பண்ணிக்கிறாங்க அப்படின்னு சொல்றாங்க. இதெல்லாம் ஏதோ தற்செயலா நடந்துரல. நெதன்யாஹு கவர்ன்மெண்ட் ஃபார்ம் பண்ணதுல இருந்து, இவர் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும் ஒரு பெரிய சதித்திட்டத்தோட ஆரம்பமா, அதாவது சதித்திட்டம் அப்படிங்கறது நெதன்யாஹுவோட ஆட்சியில பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருக்கிறது அப்படீன்னு சொல்றாங்க
தன்ன ஒரு குற்றவாளியா, சட்டத்துக்கு, முன்னாடி நிறுத்தப்பட்டு இருக்கிறதுனால, சட்ட அமலாக்கத்துறை மேல தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை நெதன்யாஹூ நடத்திட்டு இருக்காரு. இவரு தன்னோட அமைச்சரவைல இருந்து, அவருக்கு விசுவாசமான அமைச்சர்கள அனுப்பி, சின் பெட்டோட தலைவரா இருக்கிற, நெதன்யாஹு மேல வழக்குக்கு பதிஞ்சு விசாரிக்கிற ஷின்பேட் தலைவர்மேல, முக்கியமான அரசு தகவல்களை லீக் பண்ணதா பொய்யான ஒரு குற்றச்சாட்டை உருவாக்கி, அவர் மேல பொது மக்களுக்கு இருக்க நல்ல அபிப்பிராயத்தை கெடுத்து, அவர குற்றவாளியாக சித்தரிச்சு, தனக்கு எதிரா ஒருவர் இன்னொருவரோட சேரக்கூடாது அப்படீன்னு, எல்லாரையும் ஏமாத்தி பல தில்லுமுல்லுகள, தொடர்ந்து செஞ்சுட்டு வர்றதா சொல்றாங்க. படை பலமும், ஆணவமும், அகங்காரமும், பதவி ஆசையும், ஒருத்தர எந்த அளவுக்கு கொடும்பாவியா மாத்திருதுன்னு பாத்தீங்களா? இந்தியால மோடிகூட இந்தமாதிரி ஒரு கேரக்டர்தான்னு சொல்றாங்க. ஆனா, ஒரு அளவுக்கு மேல ஓவரா போனா, முடிச்சு விட்டுருவாங்கன்னு பயம் இந்த தேர்தலுக்கு அப்புறம் வந்திட்டதானால, அடங்கி ஒடுங்கி இருக்கிறார்னு சொல்றாங்க. நீங்க என்ன நினைக்கிறீங்க?
சிரியா அலெப்போல பெரும் பகுதிய புடிச்சதுக்கு அப்புறமும், சிரியா எதிர்ப்பு தீவிரவாதிகள் தொடர்ந்து முன்னேறிட்டு வராங்க. ஹாமாவோட புறநகர் பகுதியில கடுமையான சண்டை தொடர்ந்து நடந்துட்டு வருது. கத்தாரோட இன்னும் பல நாடுகளும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதா ரஷ்யா சொல்லி இருக்கு, ஆனா அதுக்கு உண்டான கண்டிஷன் இன்னும் செட் ஆகல அப்படின்னும் சொல்லப்படுது.
இஸ்ரேலும், அது கூட சேர்ந்து சிரியாவ எதிர்க்கிற தீவிரவாத குழுக்களும் ஒண்ணு சேர்ந்து, மேற்கு ஆசியாவ ஒரு பயங்கரவாத மையமாக மாற்ற முயற்சி செய்து அப்படின்னு அரக்ச்சி சொல்லி இருக்காரு. சிரியா தீவிரவாதிங்க கைக்குள்ள போயிருச்சுன்னா, அதனால பாதிக்கப்பட்ரது சிரியா மட்டும் கிடையாது, அதை சுற்றி இருக்கிற எல்லா நாடுகளுக்கும் ஆபத்து ஏற்படும் அப்படின்னு ஈரான் எச்சரிக்கை செஞ்சு இருக்கு. காசாவோட வடக்கு பகுதியில இஸ்ரேல் நடத்துன பயங்கர தாக்குதல டபிள்யூ ஹெச் ஓ கண்டிச்சு இருக்குது. பாலஸ்தீன குழந்தைகளோட பேரழிவு மற்றும் பயங்கரமான நிலைமை குறித்து, ஐக்கிய நாடுகள் சபையோட குழந்தைகள் அமைப்பு யுனிசெஃப் கவலை தெரிவிச்சிருக்கு.
அமெரிக்காவோட மிரட்டலுக்கு பயப்படாத ஏமன் போராட்டக்காரர்கள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவா குரல் கொடுத்துட்டு இருக்காங்க. இஸ்ரேலோட இனப்படுகொலை போருக்கு உட்பட்ட பாலஸ்தீனர்களுக்கு, தங்களோட ஆதரவ மீண்டும் மீண்டும் வலியுறுத்தி, ஏமன் தலைநகர் சனாலயும், நாட்டோட மற்றும் பல நகரங்கள்லயும் ஏமன் மக்கள் ஒன்று கூடி, புதிய வாராந்திர ஆர்ப்பாட்டங்களை நடத்திட்டு வர்றாங்க.
காசாமீதான இஸ்ரேலோட முழுமையான முற்றுகையால, பாலஸ்தீனர்கள் கடுமையான பசியையும் பட்டினியையும் சந்திச்சிட்டு இருக்குற அதே நேரத்துல, இஸ்ரேலுக்கு தேவையான பொருட்கள தொடர்ந்து வழங்குற, சில அரபு நாடுகள் கடைபிடிக்கிற செயலானது, ரொம்ப வெட்கக்கேடானது அப்படின்னு ஏமன்ல இருந்து வர்ர ஒரு அறிக்கை கண்டிச்சிருக்கு.
எகிப்தும், ஐக்கிய அரபு எமிரேட்சும், ஜோர்டான் போன்ற நாடுகள்ல இருந்தும், இஸ்ரேலுக்கு செய்ற ஏற்றுமதி, போன வருஷத்தைவிட இந்த வருஷம் பெருமளவு அதிகரிச்சிருக்குன்னு இஸ்ரேலோட வணிகத்துறை புள்ளி விபரங்கள வெளியிட்ருக்கு.
---
Comments
Post a Comment